முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பாக்லான் மாகாணத்தின் ஜுக்லா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் 6 வீரர்கள் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், ஆப்கனில் உள்ள 10 மாகாணத்தில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே மோதல் நடைபெற்றதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.