முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நாளைமுதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைமுதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைமுதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகள் நாளைமுதல் காலை 9 மணிமுதல் 12.30 மணிவரை மற்றும் மதியம் 2 முதல் 5 மணிவரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஜூன் 11 முதல் 14 வரை முற்பகலில் அத்தியாவசிய பொருள்களும், பிற்பகலில் கரோனா நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →