தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் கூடுதல் தளர்வுகள்: நாளைமுதல் திரையரங்குகள், உணவகங்களுக்கு அனுமதி

ANI

கரோனா குறைந்ததையடுத்து பஞ்சாபில் நாளைமுதல் திரையரங்கு, உணவகம், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் கரோனா பரவல் உறுதியாகும் விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதையடுத்து பொதுமுடக்கத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகள்:

திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் பணியாளர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கானது இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரையும், வார இறுதி நாள் ஊரடங்கு சனிக்கிழமை இரவு 8 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரையும் அமலில் இருக்கும்.

மதுபானக் கடைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆம் வகுப்பு தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி!

10-ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பிடித்த தஞ்சை!

தபோல்கர் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை! மூவர் விடுதலை!

இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானதல்ல: ஜெய் ஷா அதிரடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வில் 94.39% தேர்ச்சி

SCROLL FOR NEXT