கேரளத்தை ஆட்சி செய்தவர்கள் ஊழலின் மையமாக மாற்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவின் சத்தனூரில் இன்று பிரசாரக் கூட்டத்தின்போது பேசிய அமித் ஷா,
ஒரு காலத்தில், சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக கேரள கருதப்பட்டது. அதிகம் படித்த மற்றும் அமைதியை நேசிக்கும் மாநிலமாக அறியப்பட்டது.
ஆனால், வலது முன்னணி மற்றும் இடது முன்னணி அரசுகள் ஊழலின் மையமாக மாற்றியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.