காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 
தற்போதைய செய்திகள்

மார்ச் 27-ல் முதல்முறையாக பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி

தமிழகத்திற்கு மார்ச் 27ஆம் தேதி முதல்முறையாக பிரசாரத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகிறார்.

DIN

தமிழகத்திற்கு மார்ச் 27ஆம் தேதி முதல்முறையாக பிரசாரத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 27ஆம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் முதல்முறையாக தமிழக பிரசாரத்திற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி 4ஆம் கட்டமாக சேலத்தில் வரும் 28 ஆம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

எனக்கு 62; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

SCROLL FOR NEXT