தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் இன்று தாக்கல் செய்துள்ளார்.

DIN

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் இன்று தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியானார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. 

இந்த ஆணைய அதிகாரி மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினிடம், விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை அருணா ஜெகதீசன் இன்று தாக்கல் செய்துள்ளார். 

இந்த அறிக்கையை தாக்கல் செய்யும் போது, முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 13 - சேலத்தில் விஜய் பிரசாரம்!

நீ சிரித்து நான் பார்த்ததில்லை! எப்ஸ்டீன் பற்றி கேட்ட பெண் செய்தியாளருக்கு டிரம்ப் பதில்!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: 35 ஆக உயர்ந்த பலி: 393 பேர் காயம்!

விஜய்யை புகழ்ந்து முருகன் பாடல்! மன்னிப்பு கோரினார் பாடகர் வேல்முருகன்!

தனுஷுக்கு வில்லனாக மம்மூட்டி?

SCROLL FOR NEXT