கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்து அருகிலுள்ள கடைகளில் காய்கறிகளை வாங்கிக் கொள்ளுமாறு அங்கன்வாடி நிர்வாகக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அலட்சியமாக வெளியே சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்பேடு அங்கன்வாடி நிர்வாகக்குழு இன்று வெளியிட்ட செய்தியில்,
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் ஆட்டோ, கார், வேனில் வர அனுமதி இல்லை. மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வீட்டுக்கு அருகேயுள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.