முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகலாம்: சீரம் நிறுவனம்

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா (கோப்புப்படம்)
பகிர்:

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் தொற்று குறைவாக இருந்தபோது தான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுக்கே முன்னிரிமை அளிக்கப்படுகிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட  இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். 2 - 3 மாதங்களில் தடுப்பூசி போடுவது என்பது இயலாத காரியம்.

கரோனா தடுப்பூசி போடுவதில் நிறைய சவால்கள் உள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.