முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் கருப்பு பூஞ்சையால் 120 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 120 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 120 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவா்களில் சிலரும், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலரும் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பை கொள்ளைத் தொற்றாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிர சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி,

மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 2,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 120 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.

மேலும், தற்போது மருத்துவமனைகளில் 1,780 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →