முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி, 2021 at 7:02 PM
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கரோனா
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:44 AM

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,23,986 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 210 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 83 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 12 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,200 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 911 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,04,239 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

தற்போது மருத்துவமனையில் 7,547 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவரும் அடங்குவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.