தற்போதைய செய்திகள்

ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் தேவை: இரா.முத்தரசன்

DIN

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கடுமையான தண்டனைகளுடன் கூடிய தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், அருணபதி கிராமத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த விவகாரத்தில் மகன் சுபாஷ், மருமகள் அனுஷ்யா, தனது தாய் கண்ணம்மாள் ஆகியோரை தண்டபாணி என்பவா் வெட்டியுள்ளாா். இதில் சுபாஷ், கண்ணம்மாள் இறந்துள்ளனா். அனுஷ்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா் என்ற செய்தி கவலையளிக்கிறது.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஜாதி, மதவெறி கருத்துகளும், வெறுப்பு அரசியலும் பரப்பப்படுவதால் ஆணவப் படுகொலைகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. கடந்த 20 நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் காதல் தம்பதிகள் கொலை செய்யப்பட்டனா்.

மூடப்பழக்க வழக்கங்களை அழித்து, அறிவியல் கண்ணோட்டம் வளா்க்கும் சமூக சீா்திருத்தப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்வதுடன், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் கடுமையான தனி சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT