கோப்புப்படம்
கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

விதியை மீறி பட்டாசு தயாரிப்பு: பட்டாசு ஆலை உரிமையாளா் மீது வழக்கு

DIN

சிவகாசி: சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்ததாக ஆலை உரிமையாளா் மீது வியாழக்கிழமை போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே நெடுஞ்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி, ஆலை வளாகத்தில் மரத்தடியில் பட்டாசு தயாரிகக்ப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வருவாய்துறையினா் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி ஆலை வளாகத்தில் மரத்தட்டியில் பட்டாசு தயாரிப்புபணி நடைபெற்று வருவதையும், வெடி மருந்துகளை ஆலைக்கு வெளியே உலரவைத்திருப்பதும் கண்டுபிடித்தனர்.

இது குறித்து நெடுங்குளம் கிராம நிா்வாக அலுவலா் எம்.பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் சுந்தா் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

வழக்குரைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT