புதுப்புது மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மறுபக்கம் ஆதார் தகவல்கள் கசிகின்றன என்ற தகவல்களும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
அண்மையில், ஆதார் தகவல் மற்றும் வங்கிப் பெயர் மட்டும் வைத்துக்கொண்டு மோசடி நடப்பதாகவும், அந்த மோசடிக்கு ஓடிபி எதுவும் தேவையில்லை என்றும் சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு, ஆதார் எண்ணுக்கு உரியவர்களின் கைரேகை மட்டும் திருடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாம் எங்கெல்லாம் கைரேகையை பதிவு செய்கிறோமோ அங்கிருந்து ஆதார் எண் மற்றும் கைரேகையை சட்டவிரோதமாகத் திருடும் கும்பல், நமது வங்கிக் கணக்கிலிருந்து எளிதாக பணத்தைத் திருட முடியும் என்றும் எனவே ஆதார் பயனாளர்கள், தங்களது பயே-மெட்ரிக் தகவல்களை லாக் செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் பயோ-மெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி?
ஒவ்வொருவரும் நமது ஆதார் பயோ-மெட்ரிக் தகவல்களை பாதுகாப்பாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். எப்போது நமக்கு பயோ-மெட்ரிக் தகவல் தேவைப்படுமோ அப்போது மட்டும் இந்த லாக்கை ரிலீஸ் செய்து கொள்ளலாம்.
லாக் செய்யும் முறை
ஒருவேளை, உங்களுக்கு ஏதேனும் பரிவர்த்தனைகள் தேவைப்பட்டால் அப்போதுமட்டும் இதனை அன்லாக் செய்துவிட்டு, பிறகு வேலை முடிந்ததும் லாக் செய்துகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.