முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னையில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகள்  இன்று பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 5 செப்டம்பர், 2016 at 7:17 PM
பகிர்:

சென்னையில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகள்  இன்று பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள கொண்டித்தோப்பில் தனியார் குடோன் ஒன்றில் செம்மரக்கட்டைகள்   பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து  அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், அங்கு பதுக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய்கள் ஆகும்.

இது தொடர்பாக தண்டயார்பேட்டையை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.