பயண முன்பதிவை நிறுத்தியது ஏர் இந்தியா
ஏர் இந்தியா சனிக்கிழமை தொடங்கிய பயண முன்பதிவை நிறுத்திவைத்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:58 PM
ஏர் இந்தியா சனிக்கிழமை தொடங்கிய பயண முன்பதிவை நிறுத்திவைத்துள்ளது.
உள்நாட்டில் மே 4 ஆம் தேதியிலிருந்தும் வெளிநாடுகளுக்கு ஜூன் 1 தேதியிலிருந்தும் விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டு, பயண முன்பதிவுகளை சனிக்கிழமை ஏர் இந்தியா தொடங்கியது.
எனினும் சில மணி நேரங்களிலேயே, அரசு முடிவு செய்த பிறகு பயணிகள் விமான சேவையைத் தொடங்கலாம் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவுரை கூறினார்.
Advertisement
இந்த நிலையில், உள்நாடு, வெளிநாடு விமான சேவைக்கான அனைத்து பயண முன்பதிவை ஏர் இந்தியா நிறுத்திவைத்துள்ளது.