சென்னையில் அண்ணா சாலையில் போக்குவரத்துக்குத் தடை
சென்னையில் அண்ணா சாலையில் பெருந் தொலைவுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணா சாலையில் பெருந் தொலைவுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ஜெமினி மேம்பாலத்தில் தொடங்கி திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் - அண்ணா சிலை வரையிலான பிரதான சாலை முழுவதுமாகப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துமீறி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்திலேயே மிக அதிகளவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில்தான் இருக்கின்றனர்.
எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து அலைவதால்தான் நோய் பரவுவதாகக் கருதப்படும் நிலையில் சாலையை மூடும் முடிவுக்கு வந்திருக்கிறது காவல்துறை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.