தற்போதைய செய்திகள்

மூன்றானது திருச்சி திமுக மாவட்டம்: பொறுப்பாளர்கள் அறிவிப்பு

DIN

சென்னை: திமுகவில் திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய அறிவிப்பைத் திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

திமுக திருச்சி மாவட்டச் செயலர் கே.என். நேரு, கட்சியின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் தற்போது வடக்கு, மத்திய, தெற்கு  என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

திருச்சி வடக்கு மாவட்டச் செயலராகக் காடுவெட்டி தியாகராஜன் இருப்பார்.

திருச்சி மத்திய மாவட்டத்தின் பொறுப்பாளராக லால்குடி வைரமணி, திருச்சி தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT