பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 7, 2020
செய்திகள் - படங்களில்
உத்தரப் பிரதேசத்தில் லக்னௌவில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் கண்காட்சியில் வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்திடும் நிகழ்வின்போது இலகு ரக எந்திரத் துப்பாக்கியொன்றை ஏந்தியவாறு இருப்பவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அஸ்ஸாமில் கோக்ரஜாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போடோ உடன்பாடு கையெழுத்திடப்பட்டதைக் கொண்டாடும் விழாப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஜகதீஷ் முகி, முதல்வர் சர்வானந்த சோனோவால்.
தெலங்கானாவில் மேதாரத்திலுள்ள சம்மக்கா - சரளம்மா கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிழாவின்போது வழிபட்ட ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
அமெரிக்க செனட் அவையில் பதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகையில் உரையாற்றியபோது, தாம் விடுவிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் செய்தித் தாள் தலைப்பைக் காட்டுகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்த அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் மற்றும் அவருடைய மனைவியும் இத்தாலிக்கான இந்தியத் தூதருமான ரீனத் சாந்து.
பெங்களூருவில் கெம்பபுராவில் அருகே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றதால் சாய்ந்துவிட்ட ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டடம்.
செர்பியாவில் கெலிபிஜாவிலுள்ள செர்பியாவுக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான எல்லைக் கோட்டருகே நிற்கும் குழந்தைகள். ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரிக்குள் நுழைவதற்காக அந்த நாட்டுடனான செர்பிய எல்லையில் குழந்தைகள் உள்பட இரு நூறுக்கும் அதிகமானோர் காத்திருக்கின்றனர்.