தற்போதைய செய்திகள்

கோவையில் நீலச்சட்டை பேரணி 

DIN


கோவையில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நீலச்சட்டை பேரணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை நீலச்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் திக தலைவர் கி.வீரமணி, திவிக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், மமக தலைவர் ஜவஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பேரணியில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கொடியசைத்து துவக்கி வைத்தார். பறையிசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர். இதையடுத்து டாக்டர் பாலசுந்தரம் சாலையில் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT