தற்போதைய செய்திகள்

காடாம்பாடியில் கள் விற்ற பெண் கைது.

DIN

சூலூா்: சட்டவிரோதமாக கள் விற்ற ஒரு பெண்ணை சூலூா் போலீசாா் கைது செய்தனா்.

சூலூா் அடுத்த காடாம்பாடி பகுதியில் உதவி ஆய்வாளா் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தபோது, சட்டவிரோதமாக பாட்டிலில்கள் அடைத்து  விற்பனை செய்ய அங்கு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த பழனிசாமி என்பவரது மனைவி கண்ணம்மாள் (65) என தெரியவந்தது. உடனே போலீஸார் அவரை கைது செய்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த சூலூா் போலீஸார் விற்பனை செய்வதற்காக கண்ணம்மாள் வைத்திருந்த சுமாா் 4 லிட்டா் கள் பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT