சாத்தான்குளம் காவல் நிலைய காவல்துறையினரால் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜ் என்பவரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
ஒட்டப்பிடாரம் அருகே பூசனூர் என்ற இடத்தில் காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் தொடரப்பட்ட இந்தக் கொலை வழக்கில் ஏற்கெனவே சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.