தற்போதைய செய்திகள்

தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில்60 பேருக்கு கரோனா தொற்று

சென்னை தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை சென்னையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பு மிக அதிகளவில் உள்ளது.

அந்தவகையில் ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் தண்டையாா்பேட்டை மண்டலத்தில் உள்ள சோலையப்பன் தெருவில் மட்டும் 60 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது வருகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

SCROLL FOR NEXT