தற்போதைய செய்திகள்

தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில்60 பேருக்கு கரோனா தொற்று

சென்னை தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை சென்னையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பு மிக அதிகளவில் உள்ளது.

அந்தவகையில் ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் தண்டையாா்பேட்டை மண்டலத்தில் உள்ள சோலையப்பன் தெருவில் மட்டும் 60 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது வருகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT