தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவர் சாவு,  ஒருவர் காயம்

DIN

பெருந்துறை: பெருந்துறை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். கல்லூரி மாணவர் பலத்த காயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொய்க்குன்றம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் வல்லரசு(23). இவர் கோவையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் படித்து வருகிறார். ஈரோடு வில்லரசம்பட்டி, எஸ்.எஸ்.பி. நகரைச் சேர்ந்த மாரப்பகவுண்டர் மகன் முத்துசாமி(54). இவர் ஈரோடு காசிபாளையத்திலுள்ள அரசு போக்குவரத்து கழக கிளையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இவர் இருசக்கர வாகனம் ஓட்டி வர, ஈரோடு, வில்லரசம்பட்டி, எஸ்.எஸ்.பி. நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனிசாமி (55) பின்னால் அமர்ந்து வந்தார். இன்று காலை வல்லரசு தனது இருசக்கர வாகனத்தில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிகோயில் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் முத்துசாமி ஓட்டிவந்த இருசக்கர வாகனம் வல்லரசு ஓட்டிவந்த வாகனத்தின் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே முத்துசாமி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பழனிசாமி, வல்லரசு ஆகியோர் சிகிச்சைக்காக, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். வல்லரசு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பதைபதைக்கவைக்கும் சி.சி.டி.வி பதிவு:

இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி. வீடியோ பதிவு வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டு வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் தூக்கியெறிக்கப்படும் காட்சி பதைபதைக்கவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT