தற்போதைய செய்திகள்

அன்னையர் தினம்: சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவர்களுக்கு கையுறைகள்

DIN


சங்ககிரி: அன்னையர் தினத்தையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் சங்ககிரி அரசு மருத்துவமனையில் பணிபுரியம்  மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்புக்  கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கரோனை பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கையாக அரசுகள் மே 17-ம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதையடுத்து சுகாதாரத் துறையின் சார்பில்  பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அன்னையர் தினத்தையொட்டி, கரோனா பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சங்ககிரி மருத்துவர்கள், செவிலியர்களுக்குத்  தற்பாதுகாப்பு உபகரணங்களான கையுறைகளை ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி எ. வெங்கடேஸ்வரகுப்தா தலைமையில் மருத்துவ அலுவலர் (பொ) திருமாவளவனிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவர் சசிகுமார், செயலர் திவாகர், நிர்வாகி செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT