முகப்பு
தற்போதைய செய்திகள்

குமரி மாவட்ட அணைகள் ஜூன் 8-ல் திறப்பு

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,சித்தாறு I மற்றும் II அணைகளிலிருந்து ஜூன் 8 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 26 மே 2020, 7:40 pm IST
பகிர்:


கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணம் கால் 
பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காகப் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,
சித்தாறு I மற்றும் II அணைகளிலிருந்து ஜூன் 8 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பொன்றில், வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளை ஏற்று, கோதையாறு பாசனத்திற்கு 8.6.2020 முதல் 28.2.2021 வரை
நாள் ஒன்றுக்கு 850 கன அடி/வினாடிக்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,
சித்தாறு I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும்
பட்டணம்கால் பாசனப் பகுதிகளின் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி 
பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.