முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹைதராபாத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு

ஹைதராபாத் பெருநகர மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தியுள்ளதாக நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.தராகா ராம ராவ் தெரிவித்தார்.

Updated On : 15 நவம்பர், 2020 at 2:34 AM
பகிர்:

ஹைதராபாத் பெருநகர மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தியுள்ளதாக நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.தராகா ராம ராவ் தெரிவித்தார்.

சம்பள உயர்வு குறித்து ராவ் கூறியதாவது:

“மும்பை மற்றும் சென்னை போன்ற பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது, ​​ஹைதராபாத்தில் கரோனாவின் தீவிரம் குறைவாக உள்ளது. இதற்கு ஹைதராபாத் பெருநகர மாநகராட்சித் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்குறார்கள்.

Advertisement

அவர்களின் சம்பளத்தை அரசு மாதத்திற்கு ரூ .3,000 முதல் ரூ .17,500 ஆக உயர்த்தியுள்ளது. 

முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் ஏற்கனவே 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சம்பளத்தை உயர்த்தினார். துப்புரவுத் தொழிலாளர்கள் மீது முதலமைச்சருக்கு தனிப் பாசம் உள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாங்கள் எவ்வளவு கொடுத்தாலும், அது இன்னும் குறைவாகவே உள்ளது என்று முதல்வர் கருத்து தெரிவித்தார்.

ஏனென்றால் 1 கோடி மக்கள் போடும் குப்பைகளை ​​25,000 பேர் சுத்தம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு எவ்வளவு செய்தாலும் அது குறைவு தான்.

ஊதிய உயர்வு என்பது தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.