தற்போதைய செய்திகள்

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் டிராக்டர் மோதி கட்டட தொழிலாளி பலி

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் டிராக்டர் மோதி கட்டட தொழிலாளிஉயிரிழந்தார்.

DIN


ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் டிராக்டர் மோதி கட்டட தொழிலாளிஉயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் குமார்(49). இவர் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், குமார் புதன்கிழமை காலை  இருசக்கர வாகனத்தில் ராஜபாளையத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் நிலைய காவலர்கள் குமாரின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுவடுகள்...

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தெ.ஞா. என்னும் தெய்விக ஞானக் குழல்

தமிழ் கற்பதைத் தவமாய் கருதியவர்...

வானுக்கு வரம்...

SCROLL FOR NEXT