அஞ்ச மாட்டேன்; அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன்: ராகுல்
இவ்வுலகில் யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன்... எவருடைய அநீதிக்கும் நான் தலைவணங்க மாட்டேன்...
யாருக்கும் அஞ்ச மாட்டேன்; அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
காந்தி ஜெயந்தியையொட்டி, சுட்டுரையொன்றை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.
"இவ்வுலகில் யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன்... எவருடைய அநீதிக்கும் நான் தலைவணங்க மாட்டேன், பொய்யை உண்மையால் நான் வெல்வேன், மேலும் பொய்யை எதிர்க்கும்போதான அனைத்து இன்னல்களையும் என்னால் தங்கிக்கொள்ள முடியும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்."
என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கின் தொடர்ச்சியாக கொல்லப்பட்ட மனீஷாவின் குடும்பத்தினரைச் சந்திக்க வியாழக்கிழமை சென்றபோது, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டனர்.
மூன்று பிரிவுகளில் வழக்குத் தொடுத்து, விருந்தினர் இல்லத்தில் மாலை வரை காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை மாலையில் உத்தரப் பிரதேச அரசு விடுதலை செய்தது.
இந்த நிலையில் அஞ்ச மாட்டேன் என்று சுட்டுரைத்துள்ளார் ராகுல் காந்தி.