தற்போதைய செய்திகள்

அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து: ஆயுதப்படை காவலர் தலைமறைவு

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து, தனது உறவினர்களான அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான, சேலம் ஆயுதப்படை போலீஸாரை வாழப்பாடி போலீஸார் தேடி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன்(27) . இவர் சேலம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது உறவினர்களான அருண்குமார்(29), அசோக்குமார்(27) ஆகியோருடன் சேர்ந்து நேற்று  வியாழக்கிழமை மாலை மது அருந்தியுள்ளனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்லும் மாயவனை,  அசோக்குமார், அருண்குமாரும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த காவலர் மாயவன், தனது நண்பர்கள், உறவினர்கள் சிலரை அழைத்துச் சென்று, வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அண்ணன் தம்பிகளான அருண்குமார், அசோக்குமார் ஆகிய இருவரையும், கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், அசோக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருண்குமார் லேசான காயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து, தனது உறவினர்களான அண்ணன்-தம்பி இருவரை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான சேலம் ஆயுதப்படை போலீசார் மாயவனை வாழப்பாடி போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT