ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஆத்தூரில் ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள். 
தற்போதைய செய்திகள்

ஆத்தூரில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் ஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். நகர செயலாளர் அ.மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதனையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.நகர கழக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். 

நிகழ்ச்சியில் மாவட்டதுணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் அ.சகாதேவன்,டி.எம்.ராமலிங்கம் சங்கீதாமுருகேசன் ஜி.முரளிசாமி வி.முஸ்தபா என்.வீராச்சாமி உமையாள்புரம் கூட்டுறவு வங்கித்தலைவர் வாசுதேவன் செல்லக்கண்ணு திருமண் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசாகா வரலாற்றுச் சாதனை..! இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனையுடன் மோதல்!

டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

SCROLL FOR NEXT