முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்பிலான 1.01 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்பிலான 1.01 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் விமானத்தில் பயணம் செய்த பயணியின் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்பிலான 1.01 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →