தற்போதைய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 648 கி. தங்கம் பறிமுதல்

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 648 கி. தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்த 27 வயதான பயணி ஒருவர் 648 கி. தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. 

அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தைக் கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT