தற்போதைய செய்திகள்

புதுச்சேரி கம்பன் கழக துணைச் செயலாளர் கி. கல்யாணசுந்தரம் காலமானார்

DIN


புதுச்சேரி கம்பன் கழகத்தின் துணை செயலாளரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான கி. கல்யாணசுந்தரம்(88), வயது முதிர்வின் காரணமாக புதன்கிழமை இரவு காலமானார்.

அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், புதுச்சேரி கம்பன் கழக துணைச் செயலாளராக இருந்து, கம்பன் கழக விழாக்களில் மறைந்த கம்பன் கழக செயலர் முருகேசன் அவர்களுடன், இணைந்து பெரும் பணியாற்றியவர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதி புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியில் வசித்துவந்த இவர், வயது முதிர்வின் காரணமாக புதன்கிழமை இரவு 11 மணிக்கு உயிரிழந்தார்.

இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ஜெய்சங்கர், லிங்கேஸ்வரன், தேன்மொழி, மலர்விழி ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.

இவரது உடல் புதுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT