புலம் பெயர்ந்த செங்கல்சூளைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருள்களை வழங்கிய கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி.  
தற்போதைய செய்திகள்

புலம் பெயர்ந்த செங்கல் சூளைத்தொழிலாளர்களுக்கு  நிவாரண உதவி கோட்டாட்சியர் வழங்கல்

திருவள்ளூர் பகுதியில் கரோனாவால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர்ந்த செங்கல்சூளைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருள்களை கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி புதன்கிழமை நேரில் சென்று

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் கரோனாவால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர்ந்த செங்கல்சூளைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருள்களை கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி புதன்கிழமை நேரில் சென்று வழங்கினார்.

தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான செங்கல் சேம்பர்கள் செயல்பட்டு வருகிறது. அதனால் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஓடிசா, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இங்குள்ள செங்கல்சூளைகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபெயர்ந்து செங்கல் உற்பத்தி பணி செய்வதற்கு திருவள்ளுர் மாவட்டத்திற்கு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட வருவாய்த்துறை, அசிம் பிரேம்ஜி பவுண்டேசன் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன உதவியுடன் புலம் பெயர்ந்த செங்கல்சூளை தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கிளாம்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல்சூளைக்கு கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி தலைமை வகித்து கரோனா நிவாரணமாக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள் ஆகியவைகளை புதன்கிழமை   வழங்கினார். இதேபோல், செங்கல் சேம்பர்களில் வேலை செய்து வரும் கர்ப்பிணிகள், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 2400 பேருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் டில்லிபாபு, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், கிளாம்பாக்கம் ஊராட்சி தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் ரவி, ஐ.ஆர்.சி.டி.எஸ் கள ஒருங்கிணைப்பாளர்கள் மரிய ஆனந்தராஜ், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT