திரைப்பட நடிகையான நிவேதா தாமஸ் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் தர்பார், ஜில்லா, நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நிவேதா தாமஸ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.