சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியது.
கரோனா கால பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை சென்னை மாநகரிலும் அருகிலுள்ள மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. மாநகரில் பரவலாக மாநகர்ப் பேருந்துகள் இயங்கின.
எனினும், பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பேருந்துகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிடக் குறைவாக இருந்தது.
பேருந்துகளில் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.