எனக்கும் துல்கருக்கும் பிரச்னையா? டொவினோ தாமஸ் பதில்!
டொவினோ தாமஸ் - துல்கர் சல்மான் குறித்து...
நடிகர் டொவினோ தாமஸ் நடிகர் துல்கர் சல்மான் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நடிகர் டொவினோ தாமஸ் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் நடிப்பில் நிறைய வெற்றிப்படங்கள் அமைந்திருக்கின்றன. முக்கியமாக, ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார்.
தற்போது, பள்ளிச்சட்டாம்பி என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கயாடு லோஹர் நாயகியாக நடித்த இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட டொவினோவிடம், “உங்களுக்கும் துல்கர் சல்மானுக்கும் இடையே என்ன பிரச்னை?” எனக் கேட்கப்பட்டது.
அதனைக் கேட்டு சிரித்த டொவினோ, “எங்களுக்குள் என்ன பிரச்னை? இப்போதே துல்கருக்கு அழைக்கவா? நாங்கள் ஒன்றாக இருக்கும்போது இந்த மாதிரி வதந்திகளையெல்லாம் நினைத்து சிரிப்போம்” எனப் பதிலளித்துள்ளார்.