ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை குண்டு வெடிப்பு நடந்தது. பிற்பகலில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமைடந்தனர். மேலும் 12 பேர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.