தற்போதைய செய்திகள்

எல்ஈடி டிவியில் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்திற்கு எல்ஈடி டிவியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.57 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக ஹைதராபாத் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இந்நிலையில் துபையிலிருந்து வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ரூ.57 லட்சம் மதிப்பிலான 1.27 கி.கி. தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. 

எல்ஈடி டிவியில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT