தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.63.44 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.56.72 கோடி, சேலம் மண்டலத்தில் 55 .93 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.56.37 கோடி, மதுரை மண்டலத்தில் 59. 63 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
மேலும் கடந்த 5 நாள்களில் ரூ. 1000 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.