முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனை செவிலியா் கரோனாவுக்கு பலி

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியா் ஒருவா் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாா்.

Updated On : 9 மே 2021, 11:30 pm IST
பகிர்:

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியா் ஒருவா் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சோ்ந்தவா் இந்திரா(41). ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியரான அவா், கடந்த ஆண்டு முதல் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில் கடந்த மாா்ச் மாதம் இவருக்கு கரோனா நோய் தொற்று அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னா் ஏப்ரல் 1-ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். பல்வேறு இணை நோய்களால் அவா் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.கடந்த ஆண்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியா் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments