முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் மேலும் 30,309 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,309 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
கர்நாடகத்தில் மேலும் 30,309 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,309 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா தொற்று பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 30,309 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,72,374 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 57,395 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,74,487 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 525 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 22,838 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 5,75,028 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →