தெலுங்கானா மற்றும் புதுச்சேரி(பொ) ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஸ்புட்னிக் தடுப்பூசி,2 டிஜி கரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்திடம், காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி, பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.
மேலும் ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து தயாரிப்பினை, புதுச்சேரியில் மேற்கொள்ள வேண்டும் என்று, அவர் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் குழுமத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக புதுவை முதல்வரிடம் ஆலோசனை நடத்தி, மருந்து தயாரிப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.