தற்போதைய செய்திகள்

சாலை விபத்து: கார் கவிழ்ந்து இரு பெண்கள் பலி

DIN


புதுக்கோட்டை:  புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரிட்ட சாலை விபத்தில் திருமண நிகழ்வுக்குச் சென்றவர்களின் கார் கவிழ்ந்து இரு பெண்கள் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கருக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சிக்கு திருமண நிகழ்வுக்காக காரில் புறப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில், புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையில் கைனாங்கரை பகுதிக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த பொலிரோ பிக்அப் வேன் டயர் வெடித்து நிலைகுலைந்து, இந்தக் கார் மீது மோதியது.

இதில், சாலையில் இருந்து இறங்கிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த கருக்காகாட்டைச் சேர்ந்த அருள்தாஸ் மனைவி ஆரோக்கிய மலர்விழி (40) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மார்ட்டின்ராஜ் மனைவி ஞானபால் இனிகோமேரி (38), பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பகலில் உயிரிழந்தார்.

காரை ஓட்டி வந்த அருள்தாஸ் தாடையில் காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மாத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT