தற்போதைய செய்திகள்

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை ஆய்வு செய்ய ஐசிஎம்ஆர் முடிவு

கரோனா தொற்றை தடுப்பதில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறனை ஆய்வு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் மேற்கொள்ளப்படும்

DIN

கரோனா தொற்றை தடுப்பதில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறனை ஆய்வு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானி மருத்துவர் தருண் பட்நாகர் தெரிவித்தார். 

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தற்போது நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜென்காவின் கோவிஷீல்ட் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் செயல்திறன், கரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, எந்த அளவுக்கு உடலில் பாதிப்பைத் தடுக்கிறது ஆகியவை குறித்து  முதல்முறையாக அடுத்த வாரம் முதல் ஆய்வு செய்ய உள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் அமைப்பின் தேசிய தொற்றுநோய்வியல் அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் தருண் பட்நாகர் கூறுகையில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஐசிஎம்ஆர் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், 2 டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் என இரு பிரிவாக பிரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த ஆய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோர், அவரின் தடுப்பூசி நிலவரம் ஆகியவையும் கணக்கிடப்படும். இந்த ஆய்வின் நோக்கம் என்பது, கரோனா வைரஸை தீவிரம் அடையவிடாமல் தடுப்பூசி எந்த அளவு தடுக்கிறது, எந்த அளவுக்கு வீரியமாக தடுப்பூசி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளத்தான்.

நாட்டில் இரு தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல்முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு அடுத்த வாரம் முதல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்த தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மதிப்பிடுவதே இதன் நோக்கம் எனத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இதுவரை 20. 89 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டாலும் தீவிரமாக தொற்று ஏற்படாமல் தடுக்கலாம், உயிரிழப்பைத் தடுக்கலாம் என்று கூறியுள்ளது. 

அதேசமயம் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று மத்தியஅரசு அறிவுறுத்தி வருகிறது.

தற்போது கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் மூன்றாவது தடுப்பூசியாக ரஷியாவின் கமலீயா நிறுவனத்தின் ஸ்பூட்னிக்-வி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது. இது தற்பாது வரை ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT