தற்போதைய செய்திகள்

நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

DIN

நடிகர் சூர்யாவைத் தாக்கும் நபருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிய இந்தத் திரைப்படம் வெளியானதிலிருந்து பல்வேறு விவாதங்களையும், அதனைத் தொடர்ந்து இருளர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாகக் கூறி பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி நடிகர் சூர்யாவை உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்ட பிரபலங்கள் அவருடன் நிற்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு பரிசு அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

மூதாட்டி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT