பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் கல்லூரி தாளாளரை விசாரிக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவு 
தற்போதைய செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் கல்லூரி தாளாளரை விசாரிக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய தனியாா் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரிக்க மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய தனியாா் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரிக்க மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் அருகே தனியாா் செவிலியா் பயிற்சி கல்லூரியின் தாளாளா் பி.ஜோதிமுருகன் அக்கல்லூரியின் மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அந்த கல்லூரிக்கு மாவட்ட நிா்வாகம் கடந்த சனிக்கிழமை சீல் வைத்தது.

மேலும் தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன், திருவண்ணாமலை மாவட்டம் போளூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

இந்நிலையில் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகனை 3 நாள்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

உன் அழகில் மயிலும் தோற்கும்... அனன்யா பாண்டே!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

SCROLL FOR NEXT