தற்போதைய செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் கல்லூரி தாளாளரை விசாரிக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவு

DIN

திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய தனியாா் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரிக்க மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் அருகே தனியாா் செவிலியா் பயிற்சி கல்லூரியின் தாளாளா் பி.ஜோதிமுருகன் அக்கல்லூரியின் மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அந்த கல்லூரிக்கு மாவட்ட நிா்வாகம் கடந்த சனிக்கிழமை சீல் வைத்தது.

மேலும் தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன், திருவண்ணாமலை மாவட்டம் போளூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

இந்நிலையில் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகனை 3 நாள்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT