முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
தமிழகத்தில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,36,620 பரிசோதனைகளில் புதிதாக 8,981 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிகிச்சையில் 30,817 பேர் உள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,76,413 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 984 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,08,763 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,833 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்கள்:

சென்னையில் அதிகபட்சமாக 4,531 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு - 1,039
கோவை - 408
திருவள்ளூர் - 514
வேலூர் - 189

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.