கோல்பாரா(அசாம் மாநிலம்): அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் 2018ல் சிறுமியை வன்புணர்வு மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக தற்போது வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நான்கு வருடம் முன்பு அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் ரோங்ஜூலி ரயில்வே நிலையத்திற்கு கீழ்வரும் சிமோலிடோல தேநீர் தோட்டத்தில் ஸ்ரீனுஸ் ராங் என்கிற கலு முண்டா 6 வயது சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று கோல்பாரா போக்ஸோவின் சிறப்பு நீதிபதி எஸ் தார் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கினார்.
குற்றவாளியின் வழக்கறிஞர் சஞ்சய் சர்மா,"ராங் அந்த சிறுமியை வலுக்கட்டயமாக தோட்டத்தில் வைத்து தவறிழைத்தார்.மூன்று நாட்களுக்கு பிறகு அந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த ராங்கை 2018 டிசம்பர் 3ல் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது" என்று கூறினார்.