தற்போதைய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... பவுனுக்கு ரூ.840 உயர்வு

சென்னையில் சனிக்கிமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

DIN

சென்னை: சென்னையில் சனிக்கிமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.52,920 ஆக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயா்ந்து புதிய உச்சமாக ரூ.51,120-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் சனிக்கிமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

ஆனால் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.84.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 குறைந்து ரூ.84,900-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி

அமுல் தயாரிப்புகளின் விலை குறைப்பு

நவரத்தின, ஆபரணக் கண்காட்சியில் விற்பனை புதிய உச்சம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் 13 மாதங்கள் காணாத வளா்ச்சி!

காஸா சிட்டி மருத்துமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

SCROLL FOR NEXT